![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkUbFEcsYmkvX6ZIngMbFFhIeMeAKuRo5Ig8EjjOdANFNa9gT9nQNkc4R0PFZIMRtjS_7MIrgDAMZpy1hMHHS94jSYxedAhvferXvGrKCb0N9DU31S__ZkMvhw_mNsNbQSD7eOLH43H7SV/s320/e40e080020822a8e4cdf51f1cc3d28ef_XL.jpg)
இந்தத் தாழமுக்கம், அடுத்த 24 மணித்தியாலங்களில் புயலாக மாறலாம். அது வடமேற்குத் திசையில் நகர்ந்து, தீவிர புயலாக தமிழ் நாட்டை தாக்கலாம் என அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வடக்கு கிழக்கு கடல் சடுதியாக கொந்தளிக்கலாம். காற்றின் வேகம் திடீரென மணிக்கு 80 முதல் 100 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLNYMA3s5gDT3AENe96nZcxl6Ci4e5b99ep-nTz0-TKxudmiRTaaI_hqbOWJ0ysSn4jfWmE7EakyzJfOyVbMrWVNj0YqWr92jPNUobOUg19kJLKcP7EBaYhONYaA-erSsHTy8TrRS6ivIH/w437-h217/37c3b9d71e2cd8e7ecf7bfdd9460ebef_XL.jpg)
கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்தில் இருந்து கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும், இந்தக் கடற்பரப்புக்களில் இருப்பவர்கள் கரைக்குத் திரும்ப வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
Post a Comment
0 Comments