Type Here to Get Search Results !

@LiveTamilTV

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ---------------------------------------------------------------------------------
    ---------------------------------------------------------------------------------

    SOORIYAN TV(#Tamil)

      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      --------------------------------------------------------------------------------- ---------------------------------------------------------------------------------

      சீமான் - எடப்பாடி பழனிசாமி இரகசிய தொகுதி பங்கீடு!

      தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகிவிட்டதால் அத்தனை அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. விருப்ப மனு விநியோகத்தை சில நாள்களுக்கு முன்னரே கட்சிகள் தொடங்கிவிட்டன. யார் யார் எந்த தொகுதியில் போட்டியிடப் போகின்றனர் என்பது தற்போது ஹாட் டாபிக்காக உள்ளது.

      அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற ஆர்வம் காட்டி வருகிறது. எப்படியும் 170 முதல் 180 தொகுதிகள் வரை தங்கள் கட்சி வேட்பாளர்களையே போட்டியிட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கட்சி இருப்பதாக தெரிகிறது. அதன்படி, பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தொகுதி பங்கீடு பேசி முடிக்கப்பட்டு விட்டது. பாஜக உள்ளிட்ட இதர கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

      ஜெயலலிதா இல்லாமல் இரட்டை தலைமையின் கீழ் நடைபெறும் தேர்தல் என்பதாலும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்பதாலும் அக்கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்தி செயல்பட்டு வருகிறது.

      இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் எடப்பாடி பழனிசாமி ரகசிய டீலிங் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
                                        
      சீமான் போட்டியிடும் தொகுதியில் அதிமுக வேட்பாளரை நிறுத்தாது என்று யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார்.

      கடந்த 2010ஆம் ஆண்டு அரசியல் கட்சியாக உருவெடுத்த நாம் தமிழர் கட்சி 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தனித்து போட்டியிட்டு 1.08 சதவீதம் வாக்குகளை பெற்றது. அந்த சமயத்தில் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் 12,497 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

      அதன் தொடர்ச்சியாக, எதிர்வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எங்கு போட்டியிடுகிறாரோ அந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சீமான் அடிக்கடி தெரிவித்து வருவது வழக்கம். ஆனால், அங்கு அவருக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

      ஆளுங்கட்சியான அதிமுகவை விமர்சிக்காமல் அக்கட்சிக்கு எதிராக களம் காணுவேன் என்று தெரிவிக்காமல் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் போட்டியிடுவேன் என்று திமுகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நாம் தமிழர் கட்சி அதிமுகவின் ‘பி’ டீம் என்று விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், ராஜீவ் காந்தி மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.

      மேலும், இதற்கான ரகசிய டீலிங் சீமான் - எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடையே நடைபெற்று முடிந்து விட்டது என்றும், கண்டிப்பாக சீமான் நிற்கும் தொகுதியில் அதிமுக வேட்பாளரை நிறுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, சீமான் போட்டியிடும் தொகுதி பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

      முன்னதாக, 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்யவைக்கும் நிகழ்ச்சி வருகிற 7ஆம் தேதி சென்னை, இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் என்று சீமான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

      Post a Comment

      0 Comments