கோகோ கோலா, பெப்சிகோ, நெஸ்லே ஆகியவை அதிக பிளாஸ்டிக் மாசு உருவாக்கும் காரணிகளாக உள்ளன - ஆய்வில் தகவல்! - உலகத்தமிழர்களின்ஒளிவீச்சு! எழுச்சி கொள் தமிழா! Tamil TV Channel #SOORIYANTV #TamilTV sooriyan.tv

உலகத்தமிழர்களின் ஒளிவீச்சு! Tamil TV Channel!! எழுச்சி கொள் தமிழா! #SOORIYANTV #TAMILTV #LiveTamilTVChannel on IPTV, #tamiltv #TamilTV, #sooriyantv #livetamiltv #LiveTamilTV #TamilTV, SOORIYAN TV, #TamilIPTV, எழுச்சி கொள் தமிழா! SOORIYANTVHD – SOORIYAN TV HD – TAMIL LIVE MOVIES, SOORIYAN TV, TAMIL TV Watch Now. SOORIYAN TV HD. #reels, #reels, #teaser, #viralvideos, #webseries, #originalshorts, #hit, #superhit, #latest, #trend, #trendingshorts, #trendingvideo, #drama, #action, #fyp, #fyppp,

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Top Avd

middle ad

Dec 14, 2020

கோகோ கோலா, பெப்சிகோ, நெஸ்லே ஆகியவை அதிக பிளாஸ்டிக் மாசு உருவாக்கும் காரணிகளாக உள்ளன - ஆய்வில் தகவல்!

தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக, பெரிய பிராண்டுகளான கோகோ கோலா, பெப்சிகோ மற்றும் நெஸ்லே (Coca-Cola, PepsiCo and Nestlé) ஆகியவை உலகின் அதிக பிளாஸ்டிக் மாசுபடுத்துபவையாக உள்ளன.

                                     
மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதில் “பூஜ்ஜிய முன்னேற்றம்” (“zero progress”) இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன. அமெரிக்க பிராண்ட் கோகோ கோலா அதன் வருடாந்திர தணிக்கையில் பிரேக் ஃப்ரீ ஃப்ரம் பிளாஸ்டிக்கால் ( Break Free From Plastic) உலகின் நம்பர் ஒன் பிளாஸ்டிக் மாசுபடுத்தப்பட்ட இடத்தைப் பிடித்தது, அதன் குளிர்பான பாட்டில்கள் கடற்கரைகள், ஆறுகள், பூங்காக்கள் மற்றும் பிற பொது இடங்களில் ஆய்வு செய்யப்பட்டதில் 55 நாடுகளில் 51 நாட்டில்  அடிக்கடி கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு, கணக்கெடுக்கப்பட்ட 51 நாடுகளில் 37 நாடுகளில் இந்த பிராண்டின் குப்பைகள் பெருமளவில் இருந்தது. கோகோ கோலா பிராண்டிங் 13,834 (Coca-Cola branding) பிளாஸ்டிக் துண்டுகளிலும், பெப்சிகோ பிராண்டிங் (PepsiCo branding ) 5,155 ஆகவும், நெஸ்லே பிராண்டிங் (Nestlé branding) 8,633 பிளாஸ்டிக் துண்டுகளிலும் காணப்பட்டதால், குளிர்பான பிராண்டான கோகோ கோலா பெப்சிகோ மற்றும் நெஸ்லே பொது தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.


உலகெங்கிலும் உள்ள 15,000 தன்னார்வலர்களால் வருடாந்திர தணிக்கை மேற்கொள்ளப்பட்டது, அவர்களின் நாடுகளில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் உலகளாவிய பிராண்டுகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான பிளாஸ்டிக் பொருட்களை அடையாளம் கண்டுள்ளனர். இந்த 2020ம் ஆண்டில், தன்னார்வலர்கள் 3,46,494 பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர், அவற்றில் 63% நுகர்வோர் பயன்படுத்தியதாக தெளிவாகக் குறிக்கப்பட்டன.

பிளாஸ்டிக்கின் உலகளாவிய பிரச்சார ஒருங்கிணைப்பாளரான எம்மா பிரீஸ்ட்லேண்ட் (Emma Priestland, Break Free From Plastic’s global campaign coordinator), உலகின் மாசுபடுத்தும் நிறுவனங்கள் பிளாஸ்டிக் மாசுபாட்டைத் தீர்ப்பதில் அர்ப்பணிப்புடன் இருப்பதாகக் கூறுகின்றன, ஆனால் அதற்கு பதிலாக அவை தீங்கு விளைவிக்கும் ஒற்றை-பயன்பாட்டு பிளாஸ்டிக் பேக்கேஜிங்கை (single-use plastic packaging) தொடர்ந்து தயாரித்து கொண்டே இருக்கின்றன. எம்மாவின் கூற்றுப்படி, வளர்ந்து வரும் பிளாஸ்டிக் குப்பைகளை நிறுத்துவதற்கான ஒரே வழி உற்பத்தியை நிறுத்துதல், ஒற்றை பயன்பாட்டை நிறுத்துதல் மற்றும் மறுபயன்பாட்டு முறைகளை செயல்படுத்துதல்.

"கோகோ கோலா, பெப்சிகோ மற்றும் நெஸ்லே போன்ற பன்னாட்டு பிராண்டுகள் தங்கள் தயாரிப்புகளை மக்களுக்கு எவ்வாறு வழங்குகின்றன என்பதைக் கண்டுபிடிப்பதற்கான உண்மையான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் கவனத்தை செலுத்த வேண்டும்," என்று அவர் கூறினார். இதுவரை உருவாக்கப்பட்ட அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளிலும் 91 சதவிகிதம் வரை மறுசுழற்சி செய்யப்படவில்லை மேலும் அவற்றை எரிக்கவோ, நிலப்பரப்பில் கொட்டவோ அல்லது இயற்கை சூழலில் பாதிப்பை ஏற்படுத்த தான் நிறுவனங்கள் இத்தகைய தயாரிப்புகளை தொலைநோக்கு பார்வையின்றி மேற்கொள்கின்றன என்று 2017ம் ஆண்டு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிராண்டட் பிளாஸ்டிக் கழிவுகளின் 2020 உலகளாவிய தணிக்கை, கெட்ச்அப், காபி மற்றும் ஷாம்பு (ketchup, coffee and shampoo) போன்ற சிறிய அளவிலான தயாரிப்புகளை விற்கப் பயன்படும் ஒற்றை-பயன்பாட்டு சாச்செட்டுகள் (single-use sachets), பொதுவாகக் காணப்படும் வகை வகை, பின்னர் சிகரெட் துண்டுகள், பின்னர் பிளாஸ்டிக் பாட்டில்களும் வரிசை கட்டி நிற்கின்றன. தென்னாப்பிரிக்க கழிவு சேகரிப்பாளர்கள் சங்கத்தின் (South African Waste Pickers Association) தேசிய ஒருங்கிணைப்பாளர் சைமன் ம்பாட்டா (Simon Mbata) கூறுகையில், தன்னார்வலர்களிடமிருந்து வரும் பிளாஸ்டிக்கை  மறுசுழற்சி செய்ய முடியாது.

இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள் எல்லா இடங்களிலும், கழிவு நீரோட்டத்திலும், நிலத்திலும் உள்ளன. அது புதைக்கப்படும் போது, அது மண்ணை மாசுபடுத்துகிறது. எனவே, மறுசுழற்சி செய்ய முடியாததை நிறுவனங்கள் உற்பத்தி செய்யாமல் மாற்று வழியை கண்டறிய வேண்டும் என்றார். பிளாஸ்டிக் ஏற்படுத்தும் தீங்கினை பலரும் அறிவார்கள் இருந்தும்  மக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாடு மிக மிக சொற்ப அளவில்தான் குறைந்துள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை அரசுகள் மக்களிடம் வலியுறுத்துவதை போல நிறுவனங்களிடமும் சில கடுமையான சட்ட திட்டங்களினால் பிளாஸ்டிக் தடுப்பை ஏற்படுத்தவேண்டும். நம் வீட்டைச் சுற்றியும் ஊரை சுற்றிலும் பல சிறிய சாக்லேட் கவர்கள், ஜூஸ் கவர்கள் போன்ற எண்ணற்ற சிறு சிறு பிளாஸ்டிக் கழிவுகளை நாம் கவனிக்காமல் இருந்தால் வருங்காலத்தில் மிகப் பெரும் தீங்கினை ஏற்படுத்தும். அவற்றை 'வருமுன் காத்தல்' என்ற கொள்கையுடன் அரசும் மக்களும் தொலைநோக்கு சிந்தனையுடன் காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Source:N18TAMIL

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

கனடா

5/col-left/Canada

பல்சுவை

Photography

4/grid-big/

நிகழ்வுகள்

4/sgrid/Events

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

Post Top Ad

Your Ad Spot