Type Here to Get Search Results !

@LiveTamilTV

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ **************************************************** ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    ---------------------------------------------------------------------------------

    SOORIYAN TV(#Tamil)

      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      ---------------------------------------------------------------------------------

      Bottom Ad

      வடக்கு, கிழக்கை ஊடறுத்துச் சென்ற சூறாவளி மாவீரர் தினத்தில் வந்திருந்தால் சந்தோசம்: சரத்பொன்சேகா கேலி பேச்சு

      இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசத்தை ஊடறுத்துச் சென்ற சூறாவளி, கடந்த வாரம் நடைபெற்ற மாவீரர் தினத்தின்போது வந்திருந்தால் சந்தோசமடைந்திருக்கலாம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்கேசா தெரிவித்துள்ளார்.

      நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,


      “சிவிலியன்கள் இறுதிப்போரில் கொலை செய்யப்படவில்லை. மாறாக விடுதலைப் புலிகள் இயக்கமே கட்டாயப்படுத்தி சிவிலியன்களை முன்னணியில் நிறுத்தி போராடினார்கள்.

      அப்படியிருந்தும் நாங்கள் பலரையும் மீட்டோம். புனர்வாழ்வுக்கு அனுப்பினோம்.

      இதேவேளை மாவீரர் தினத்தை கொண்டாட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

      இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசத்தை ஊடறுத்துச் சென்ற சூறாவளி, கடந்த வாரம் நடைபெற்ற மாவீரர் தினத்தின்போது வந்திருந்தால் சந்தோசமடைந்திருக்கலாம்.


      மக்களுக்கு சேதம் ஏற்பட வேண்டும் என நான் கூறவில்லை. இருப்பினும் மாவீரர்கள் நினைவேந்தலை நடத்த அனுமதிக்க முடியாது.

      இலங்கை உட்பட உலகின் பல நாடுகளிலும் விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டதாகும். இங்கிலாந்தில் கூட பிரபாகரனின் பதாதையொன்று காட்சிக்கு வைக்கப்பட்டபோது பொலிஸாரினால் அகற்றப்பட்டது.

      எமது நாட்டில் அது செய்திருந்தால் நாடாளுமன்றத்திலும் எதிர்ப்பு வெளியிட்டிருப்பார்கள். எமது தரப்பிலுள்ள மனோ கணேசன் கூட மாவீரர்நாள் குறித்து நியாயப்படுத்தி கருத்து வெளியிட்டிருந்த போதிலும் அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்.

      சிலர் ஜே.வி.பியுடன் மாவீரர்களை ஒப்பீடு செய்கிறார்கள். ஆனால் ஜே.வி.பியினர் மிகவும் சிறிதளவான போராட்டத்தை நடத்திய போதிலும் நாட்டைப் பிரிக்க செயற்படவில்லை.

      நாட்டில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின்போது 45 ஆயிரம் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டனர் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

      பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

      “இராணுவத்தில் புதிய நுட்பப்பயற்சிகளை வழங்கியமையே யுத்த வெற்றிக்குக் காரணமாகும். நான் தனிப்பட்ட முடிவுகளையும் பிரயத்தனங்களையும் மேற்கொண்டதனாலேயே பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடிந்தது.

      யுத்தத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவுக்கு கொண்டு வருவதாக நான் உறுதியளித்தேன். அதனை முடிவுக்கு கொண்டு வந்தேன். திட்டமிட்ட செயல்பாடுகளே அதற்குக் காரணமாகும். மேலும், இறுதி யுத்தத்தின்போது 45 ஆயிரம் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டனர் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுக்கின்றேன். ஐந்து அல்லது ஆறாயிரம் பேர் வரை தவறுதலாக உயிரிழந்திருக்கலாம்.

      ஆனாலும், 2 இலட்சத்து 70 ஆயிரம் பேரைப் பாதுகாக்க முடிந்தது. பயங்கர வாதத்தில் ஈடுபட்ட 12 ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்கள், மீளவும் பயங்கரவாதத்தில் ஈடுபடாதிருக்க நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசின் பொறுப்பாகும்” என்றார்.

      மீண்டும் இந்த நாட்டில் பிரிவினைவாதத்தை தலைதூக்க இடமளிக்கமாட்டோம் எனக் கூறியுள்ளார்.


      Tags

      Post a Comment

      0 Comments