இந்தியாவில் காற்றின் தரம் அருவருப்பாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
![]()
அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் ரிபப்ளிகன் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து டெமாக்ரடிக் கட்சி வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், இரு வேட்பாளர்களுக்கும் இடையேயான இறுதி நேரடி விவாதம் நேற்று நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த விவாதத்தின்போது, காலநிலை மாற்றம் பிரச்சினையில் டொனால்ட் ட்ரம்பின் நிலைப்பாடும், நடவடிக்கைகளும் பற்றி ஜோ பைடன் குற்றம்சாட்டினார்.
அதற்கு பதிலளித்த டொனால்ட் ட்ரம்ப், “சீனாவை பாருங்க, எவ்வளவு அருவருப்பா இருக்கு. ரஷ்யாவை பாருங்க, அருவருப்பா இருக்கும். இந்தியாவை பாருங்க, அருவருப்பா இருக்கு. காற்று மிக அருவருப்பா இருக்கு” என்று கூறி தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்திக்கொண்டார்.
உலக காலநிலை மாற்றத்தை குறைப்பதற்காக பாரிஸ் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை டொனால்ட் ட்ரம்ப் வெளியேற்றிவிட்டார். இதற்காக அவர் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் காற்றின் தரம் மிக மோசமாக இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்துவதற்காக அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்போ சில தினங்களில் டெல்லி வரவிருக்கிறார். இந்த சூழலில் ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்துகள் டெல்லி வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


ليست هناك تعليقات:
إرسال تعليق
ملحوظة: يمكن لأعضاء المدونة فقط إرسال تعليق.