+18 "ஆணுறை" அணியாமல் உடலுறவு கொண்டால் குற்றம்.. பெண்ணின் ஒப்புதல் முக்கியம்.. நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு!

ஆண், பெண் உடலுறவில் ஈடுபடும்போது, சம்பந்தப்பட்ட பெண்ணின் அனுமதியை மீறி ஆணுறையை பயன்படுத்தாமல் இருப்பது குற்றம் என்று கனடா சுப்ரீம்கோர்ட் அதிரடியாக அறிவித்துள்ளது.

கனடாவில் ஒரு ஆணும், பெண்ணும் நட்பாக இருந்துள்ளனர்.. இவர்கள் ஆன்லைன் மூலமாக கடந்த 2017ல் பழக தொடங்கி உள்ளனர்..

பிறகு நேரில் சந்தித்து பேசி உள்ளனர்.. நட்பு மலர்ந்துள்ளது.. ஒருகட்டத்தில், நாம் இருவரும் உடல் உறவில் ஈடுபடலாமா என்று ஆண் கேட்டுள்ளார்.. அதற்கு அந்த பெண், "ஆணுறை அணிந்து கொண்டால் அதற்கு சம்மதம்" என்று சொல்லி உள்ளார்..

நிபர்ந்தனை

இந்த நிபர்ந்தனையை கேட்டதும், முதலில் அதற்கு சரி என்று ஆண் சொல்லியுள்ளார்.. பெண்ணிடம் சொல்லியபடியே, ஆணுறை அணிந்து உடலுறவிலும் ஈடுபட்டுள்ளார்... ஆனால், அன்றைய தினமே, 2ம் முறையாக உறவில் ஈடுபட்டபோது, அந்த ஆண் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக ஆணுறை அணியாமல் உறவு கொண்டுவிட்டாராம்.. சிறிது நேரத்திற்கு பிறகுதான், அந்த பெண் இதை உணர்ந்து அதிர்ந்துள்ளார்.. பிறகு, அந்த நண்பரிடம் சண்டைக்கு போயுள்ளார்.. வாக்குவாதம் வெடித்துள்ளது.

உடலுறவு

உடலுறவு

ஆனாலும் ஆத்திரம் அடங்காத அந்த பெண், கோர்ட்டுக்கே போய்விட்டார்.. அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்... ஆனால், அந்த நாட்டின் விசாரணை நீதிமன்றம், பெண்ணின் புகாரை டிஸ்மிஸ் செய்துவிட்டது.. இதற்கு காரணம், அந்த பெண்ணின் விருப்பம் மற்றும் சம்மதத்துடன் தான் உடல் உறவில் ஈடுபட்டேன் என்று சம்பந்தப்பட்ட ஆண், கோர்ட்டில் வாதம் செய்தார்.. அந்த வாதத்தை ஏற்று, நீதிமன்றம் பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்தது.

 ஆணுறை

ஆணுறை

எனவே, அந்த பெண், இதற்கு எதிராக கனடா நாட்டு சுப்ரீம்கோரட்டில் அப்பீலுக்கு போனார்.. வழக்கை விசாரித்து நீதிமன்றம், உடலுறவின்போது பார்ட்னரின் விருப்பத்தை மீறி நாம் செயல்படுவது முறையல்ல... அந்த பெண் ஏற்கனவே இது குறித்து, முன்னதாகவும், தெளிவாகவும், ஆணிடம் விருப்பத்தை பெண் சொல்லி உள்ளார்.. அப்படி சொன்ன பிறகும், அதை அவர் மீறி செயல்பட்டது குற்றமாகும்.. எனவே, பார்ட்னரின் விருப்பத்திற்கு மாறாக ஆணுறை பயன்படுத்தாமல் இருந்தது பாலியல் குற்றமாகவே கொள்ளப்படும் என்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது...

 ஆணுறைகள்

ஆணுறைகள்

சமீபகாலமாகவே, ஆணுறைகளை ஆண்கள் முறையாக பயன்படுத்துவதில்லை என்ற புகார்கள் வெடித்து வருகின்றன. இதனால் ஏராளமான பெண்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்... உடல்ரீதியாகவும் நிறைய இன்னலுக்கு ஆளாகிவிடுகிறார்கள்.. எனவேதான், பெண்ணுறை என்ற ஒன்று இப்போது பயன்பாட்டில் அதிகம் உள்ளது.. பெண்களுக்கு இது மிகவும் பாதுகாப்பாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.. அதேசமயம், ஜெர்மனியில் பெண் ஒருவர், ஆணுக்கு தெரியாமல் அவரது ஆணுறையில் ஓட்டை போட்டு கர்ப்பமான சம்பவமும் நடைபெற்றதை இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.

Post a Comment

Previous Post Next Post
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

Top Avd

middle ad

Photography

4/grid-big/
4/feat-big/

கனடா

5/col-left/Canada

நிகழ்வுகள்

4/sgrid/Events

விளம்பரங்கள் இடம்பெற..

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

பல்சுவை

Tamil Personal Computer Info

[adnetwork code="PLC_3E3925AAF858"] ''), $atts); if (empty($atts['code'])) return ''; ob_start(); ?>