தடுப்பூசி போடாதவர்கள் நூறு டாலருக்கு குறையாமல் வரி செலுத்த வேண்டும் – கியூபெக் மாகாண முதல்வர் அதிர்ச்சி அறிவிப்பு!

(Legault Quebec Canada province premiere)
கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் covid-19 வைரஸ் தொற்று படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருவதை தொடர்ந்து மாகாண அரசாங்கங்கள் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளன.சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் போன்றவற்றை முறையாக பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாகாண அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

கனடாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட கியூபெக் மாகாணம் ,covid-19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது. கியூபெக் மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்து அளவுகளை போட்டுக் கொள்ள மறுக்கும் பெரியவர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகையை வரியாக வசூல் செய்ய திட்டமிட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post