தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சூர்யா குடும்பம் ரூபாய் 1 கோடியை அளித்துள்ளது.
நன்கொடைகளுக்கு 100% வருமான வரி அளிக்கப்படும். பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று குறிப்பிட்டு இருந்தனர்.
நிதி
இதற்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சேமிப்புக் கணக்கு விவரங்களையும் முதல்வர் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சூர்யாவின் குடும்பம் ரூபாய் 1 கோடியை அளித்துள்ளது.
நேரில் நிதி
வரவேற்பு
நடிகர் சூர்யாவின் குடும்பம் இவ்வளவு பெரிய தொகையை நிவாரணமாக வழங்கியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. திரையுலகில் இருந்து பெரிதாக இன்னும் யாரும் நிவாரண நிதி கொடுக்காத நிலையில் முதல் ஆளாகி சூர்யாவின் குடும்பம் 1 கோடி ரூபாயை கொடுத்துள்ளது. இணையத்தில் பலரும் நடிகர் சூர்யா, மற்றும் கார்த்தியை இதற்காக பாராட்டி வருகிறார்கள்.




No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.