விவேக் நினைவாக மரத்தோடு மாநாடு...
நடிகரும் இயற்கை ஆர்வளருமான விவேக், கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் மாரடைப்பால் காலமானார்.
விவேக்கின் மறைவிற்கு ரசிகர்கள், திரையலகினர் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விவேக் மறைவையொட்டி நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
சிம்பு தனது அறிக்கையில், விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மரக்கன்றுகளை வைக்க இருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
தான் சொன்னபடியே சிம்பு நடிக்கும் மாநாடு படக்குழுவினருடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு, அனைவரும் இணைந்து விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினர்.





Post a Comment