பேய் விரட்டுவதாக கூறி சாட்டையடி: கல்லூரி மாணவி உயிரிழப்பு
Sooriyan TVMonday, February 22, 2021
இராமநாதபுரம் அருகே உடல் நிலை சரியில்லாத மாணவிக்கு பேய் விரட்டுவதாக கூறி சாட்டையால் தாக்கியதில் கல்லூரி மாணவி பரிதாமாக உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ளது கோரவள்ளி கிராமம். இங்கு வசிக்கும் மக்களின் குடும்பத்தினர் பெரும்பாலும் வெளிநாடுகளில் கூலி வேலைசெய்து வருபவர்களாக உள்ளனர். சிலர், உள்ளூரிலேயே விவசாயம் செய்து வருகின்றனர்.
கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்த வீர செல்வம் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊருக்கு திரும்பி தற்போது விவசாயம் செய்து வருகிறார்.