நாட்டின் பல பாகங்களிலும் மழையு!

இன்று (03) முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு மழையுடனான வானிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வட மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post