1 வருடம் அல்லது அதற்கு மேல் நீடிக்கலாம் - சிங்கப்பூரில் 3ஆம் கட்டத் தளர்வு!

ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் 3ஆம் கட்டத்திற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நேற்று (நவம்பர் 4) தெரிவித்தார்.

இந்த 3ஆம் கட்டம் என்பது தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு திரும்பாது என்று பணிக்குழுவின் இணைத் தலைவரான திரு கான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“இது ஒரு புதிய இயல்பான நிலையாக இருக்கும், இது உலகின் பிற பகுதிகளுக்கு தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரை அல்லது பயனுள்ள சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை நீடிக்கும்” என்றார்.

இந்த சூழலில், பாதுகாப்பாக இருக்க தேவையானவற்றை கொண்டு நம்மைச் சித்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் அனைவரும் பாதுகாப்பாக வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும், முக்கிய வாழ்க்கை நிகழ்வுகளைக் கொண்டாடுவதற்கும் அதிக கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த 3ஆம் கட்டத் தளர்வுகளின்போது ஒன்றுகூடுவோரின் எண்ணிக்கை 5ல் இருந்து 8ஆக அதிகரிப்பது குறித்த திட்டம் அதிகாரிகளுக்கு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த எண்ணிக்கை வரம்பு எதுவாக இருந்தாலும் அதில் நோய் பரவல் அபாயம் உள்ளது தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Post a Comment

Previous Post Next Post

Top Avd

middle ad

Photography

4/grid-big/
4/feat-big/

கனடா

5/col-left/Canada

நிகழ்வுகள்

4/sgrid/Events

விளம்பரங்கள் இடம்பெற..

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

பல்சுவை

Slider Images

Tamil Personal Computer Info