Type Here to Get Search Results !

@LiveTamilTV

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ **************************************************** ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    ---------------------------------------------------------------------------------

    SOORIYAN TV(#Tamil)

      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      ---------------------------------------------------------------------------------

      Bottom Ad

      பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் தற்போது கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி உள்ளார்!

      உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகின்றது.

      முக்கியமாக தமிழகத்தில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

      இந்நிலையில், தமிழ் சினிமாவின் பாடும் நிலா என அறியப்படும் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது கடந்த சில தினங்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

      இந்நிலையில், அவர் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

      இதன்போது கொரோனா தொற்றுக்கான ஆரம்ப அறிகுறிகளே அவரிடம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்ததுடன் இவரை வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறும் தெரிவித்தனர்.

      இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் மருத்தவமனையில் இருந்து சிகிச்சை பெறுவதே மேலானது என மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

      கடந்த இரண்டு வார காலமாக சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை தொடர்பில் மருத்துவமனை நிர்வாகம் இன்று அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

      இதன்படி கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதாக அந்த நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

      இதற்கமைய எஸ்.பி.பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, அவருக்கு தற்போது உயிர்காக்கும் இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.


      ரசிகர்கள் பிரார்த்தனை

      பாடு நிலா பாலுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கும் செய்தி அறிந்த ரசிகர்கள் #SPBalasubrahmanyam என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். எஸ்பி பாலசுப்பிரமணியம் மிகவும் வலுவான மனிதர் என்றும், கொரோனாவில் இருந்து குணமடைந்து விடுவார் என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
      விரைவில் குணமடைவார்

      விரைவில் குணமடைவார்

      எம்.ஜி.ஆர் முதல் தனுஷ் வரை ஏகப்பட்ட பிரபலங்களுக்கு எண்ணற்ற பாடல்களை பாடியுள்ள ஒரு மகா கலைஞர் ஐசியூவில் இருக்கும் செய்தி அவரது ரசிகர்களை மிகவும் பாதித்துள்ளது. ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு வருவார் எஸ்பிபி என ட்வீட்களை பதிவிட்டு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
      தனுஷ் ரசிகர்கள்

      தனுஷ் ரசிகர்கள்

      எஸ்பிபியின் மாயக் குரலுக்கு மயங்காத ஆள் உலகிலேயே இல்லை என்று சொல்லலாம். அத்தகைய திறமையான கலைஞருக்கு கொரோனா தொற்று இந்த அளவுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும், தனுஷ் ரசிகர்கள் சார்பாக விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் ட்வீட் போட்டு வருகின்றனர்.
      தென்னிந்திய ரசிகர்களும்

      தென்னிந்திய ரசிகர்களும்

      தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என கிட்டத்தட்ட 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை செயற்கை சுவாசக் கருவிகளால் இயங்கி வரும் செய்தி அறிந்தவுடன் தெலுங்கு ரசிகர்கள் முதல் தென்னிந்திய ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

      Post a Comment

      0 Comments

      Click To Here On Every Day For Development

      Phots Shot

      8/Photography/grid-big