நாளை நடக்கும்விவசாயிகள் போராட்டத்திற்கு முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு!

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாளை(27) நடக்கும் முழு அடைப்புக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தன்னுடைய முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மற்றும் டீசல், பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து பல்வேறு கட்சிகளின் சார்பில் நாளை நாடு முழுவதும் முழு பந்த் போராட்டம் நடைபெற உள்ளது.

இதற்கு முக்கிய கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவர் பாண்டியன் கூறியதாவது:

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தன்னுடைய முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

கடையடைப்பில்  வணிகர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Bharat Bandh: செப்டம்பர் 27 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்

புதுடெல்லி: மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்கும் 40 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் சம்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM), நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

விவசாயிகள் (Farmers) போராட்டத்தின் 10 மாத காலத்தை குறிக்கும் வகையில், செப்டம்பர் 27 செவ்வாய்க்கிழமை, பாரத் பந்த் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் சிங்கு எல்லையில் நடந்த இரண்டு நாள் தேசிய மாநாட்டைத் தொடர்ந்து, எஸ்.கே.எம் 'பாரத் பந்த்'-க்கு அழைப்பு விடுத்தது.

காங்கிரஸ் (Congress), ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பந்த் ஆதரவு அளித்துள்ள நிலையில், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டத்திற்கு (Farmers Protest) பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் ஆதரவை பாரதிய கிசான் யூனியன் வரவேற்றுள்ளது, ஆனால் தங்களின் நிலைப்பாடு எந்த அரசியல் கட்சியுடனும் பகிரப்படாது என்று வலியுறுத்தியுள்ளது.

செப்டம்பர் 24 செவ்வாய்க்கிழமை எஸ்.கே.எம்-இன் பாரத் பந்த் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அம்சங்கள் இதோ:

பந்த் நேரம்:

பந்த் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இந்த நேரத்தில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி மற்றும் பிற நிறுவனங்கள், கடைகள், தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் பொது நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் நாடு முழுவதும் மூடப்பட்டிருக்கும்.

இருப்பினும், மருத்துவமனைகள், மருத்துவக் கடைகள், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் தனிப்பட்ட அவசரநிலைகளில் கலந்து கொள்ளும் நபர்கள் உள்ளிட்ட அனைத்து அவசரகால நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும். தன்னார்வ மற்றும் அமைதியான முறையில் பந்த் அமல்படுத்தப்படும் என்று எஸ்.கே.எம் உறுதியளித்துள்ளது.

வங்கி அதிகாரிகள் சங்கம் 'பாரத் பந்த்'-க்கு ஆதரவு

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AlBOC) திங்களன்று பந்த் நடத்த ஆதரவு அளித்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், மோதலின் மையத்தில் உள்ள மூன்று சட்டங்களை ரத்து செய்யவும் அரசுக்கு இது கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் பீகார் துணை முதல்வரும், ஆர்ஜேடியின் தலைவருமான தேஜஸ்வி யாதவும் செப்டம்பர் 27 அன்று பாரத் பந்த் நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளார். “NDA அரசின் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளுக்கு எதிர்ப்பு. நாங்கள் விவசாயிகளுடன் உறுதியாக இருக்கிறோம்.” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

Top Avd

middle ad

Photography

4/grid-big/
4/feat-big/

கனடா

5/col-left/Canada

நிகழ்வுகள்

4/sgrid/Events

விளம்பரங்கள் இடம்பெற..

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

பல்சுவை

Slider Images

Tamil Personal Computer Info