ஹாலிஎல பொலிசார் கைது செய்யப்பட்ட பேயோட்டுபவரின் வயது 38.
பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பேயோட்டும் நபர், யக்கல மற்றும் கலகேதிஹேன பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பெண்களுடன் வசித்து வருகிறார்.
கந்தளாய் பகுதிக்கு செல்லும் சந்தர்ப்பத்தில் ஜெயந்திகம பகுதியிலுள்ள சிறுமியின் வீட்டிற்கும் சென்றுள்ளார். சிறுமியுடன் உறவை ஏற்படுத்திய பின்னர், பெற்றோருக்கு தெரியாமல் சிறுமியை கடத்தி சென்றுள்ளார். வாகனமொன்றில் கடத்தி, ஹாலி எலவிற்கு அழைத்து வந்திருந்தார்.
2020 டிசம்பர் ஆரம்பத்தில் மகள் காணாமல் போயுள்ளதாக, சிறுமியின் தாய் சூரியபுர பொலிசில் புகார் அளித்தார்.
காணாமல் போன சிறுமி குறித்து ஹாலிஎல பொலிசார் நடத்திய விசாரணைகள் மற்றும் ஊடகங்களில் வந்த தகவல்களைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அப்போது, சிறுமி கர்ப்பமாக இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.